விளையாடச் சென்ற மகள் காணவில்லை என தந்தை புகார்.. "தாயே தன் மகளை கிணற்றில் தள்ளி கொலை" செய்தது விசாரணையில் அம்பலம்

0 362

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் - சத்யா தம்பதியினரின் 7 வயதுச் சிறுமி, அங்குள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

விளையாடச் சென்ற மகளைக் காணவில்லை என பிரகாஷ் புகார் கொடுத்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, தாய் சத்யாவுடன் அந்தச் சிறுமி சென்றது தெரிந்து விசாரித்தபோது, மகளை கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததை சத்யா ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் எதற்காக கொலை செய்தார், கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments